என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு"

    • 14-ந் தேதியும் நேரடி முறையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1915 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் 2023-24-ம் ஆண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவு களுக்கு பொதுக்கலந்தாய்வு முதல் கட்டமாக மாணவர் சேர்க்கை

    கல்லூரியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பி.காம்., பி.பி.ஏ.., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 9-ந் தேதியும் (நாளை), பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 12-ந் தேதியும், பி.ஏ., வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்க வருகிற 13-ந் தேதியும், பி.ஏ., தமிழ், பி.லிட், தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 14-ந் தேதியும் நேரடி முறையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்குப் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த கலந்தாய்வின் போது, இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல், இஎம்ஐஎஸ்), மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அசல் சான்றிதழ்கள்), சாதிச் சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ, மார்பளவு சேர்க்கைக் கட்டணமாக, கலைப்பிரிவுக்கு ரூ-.2795, அறிவியல் பிரிவிற்கு ரூ.2815, கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.1915 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    நேர்முக தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு காலி யிடங்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 21ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
    • இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் கலந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் முதல்வர் அனுராதா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்) எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல்,வேதியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த வர்களுக்கும், துணை தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்த வர்களுக்கும் வருகிற 21ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வின்போது மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், நான்கு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்டவையோடு, கலை பிரிவுக்கு ரூ.1,750, அறிவியல் பிரிவுக்கு ரூ1,810, கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ.2010 என சேர்க்கை கட்டணத் தொகையும் எடுத்து வர வேண்டும். இவ்வாறு தனது செய்திக்கு றிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்து ள்ளார். 

    ×