என் மலர்
நீங்கள் தேடியது "புருக்கோலி விலை திடீர் உயர்வு"
- ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
- புருக்கோலி கிலோ, 310 முதல் 350 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது
ஊட்டி
நீலகிரி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.வரத்து குறைவால் காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக புருக்கோலி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஊட்டி மார்க்கெட்டுக்கு புருக்கோலி ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் வருகிறது. ஊட்டி மார்க்கெட் மண்டிகளில் விற்பனைக்கு வந்த காய்கறி வகைகளில், புருக்கோலி கிலோ, 310 முதல் 350 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது
கடந்த ஒரு வாரமாக, 200 முதல் 250 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த புருக்கோலி, கிலோவுக்கு, 310 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மலை காய்கறி விவசாயம் கடுமையாக தினமும், 10 டன் அளவுக்கு புருக்கோலி விற்பனைக்கு வரும். பருவ மழைக்கு பின், 2 டன் கூட வருவதில்லை. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.






