என் மலர்
நீங்கள் தேடியது "நவ காளியம்மன் சிலை"
- புஞ்சை புளியம்பட்டி அடுத்த காராப்பாடி கிராமத்தில் 71 அடி உயர நவ காளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- இக்கோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காராப்பாடி கிராம த்தில் 71 அடி உயர நவ காளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் அருள்வாக்கு, குடும்ப பிரச்சனை, தொழில் முன்னேற்றம், மாந்திரீகம், நட்சத்திரங்களுக்கு பரிகாரம், காலபைரவர் வாராகியம்மன், ஆதி கருப்பண்ணசுவாமி போன்ற தெய்வங்கள் மற்றும் கரூர் சித்தரின் அருள் பெற்ற அய்யாகண்ணு சாமி அருள்வாக்கு கூறி வருகிறார்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 71 அடி உயரத்தில் நவகாளியம்மன் உருவச்சிலை காராப்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இக்கோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.






