என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியினர் மாதிரி கிராமம்"

    • தொடக்க விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • தோடா் பழங்குடியினருக்கு சொந்தமான இடம் மற்றும் ஐந்தாவது மைல் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

    ஊட்டி,

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடா், கோத்தா், இருளா், காட்டுநாயக்கா், பணியா், பெட்ட குரும்பா், முள்ளு குரும்பா் போன்ற 7 வகை யான பண்டைய பழங்குடி யினரில் ஒவ்வொரு பழங்குடி யினரும் தனித்தனியான கலாசாரம், உடைகள், இசை, நடனம், வீடு என தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனா்.

    இவா்களின் கலாசா ரத்தை எடுத்துரை க்கும் வகையில் ஊட்டியில் இருந்து கூடலூா் செல்லும் சாலையில் பழங்குடியினா் மாதிரி கிராமம் அமைக்க நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த மாதிரி கிராம தொடக்க விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், இதற்கான தேதி மற்றும் அவரது பயண விவரங்கள் குறித்த தகவல்கள் முடிவு செய்யப்படவில்லை.

    இந்நிலையில் இத்தி ட்டத்தை செயல்படுத்து வதற்காக ஊட்டி தாசில்தார் ராஜசேகா் தலைமையில் நீலகிரி பண்டைய பழங்குடியினா் நல சங்கத் தலைவா் ஆல்வாஸ் மற்றும் அதிகாரிகள் ஊட்டியில் இருந்து கூடலூா் செல்லும் சாலையில் அமைந்துள்ள தலைக்குந்தா பகுதியில் உள்ள தோடா் பழங்குடியினருக்கு சொந்தமான இடம் மற்றும் ஐந்தாவது மைல் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

    ஜனாதிபதி ஊட்டி வருகையையொட்டி மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த ஏற்பாடுகள் தொடா்பான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முா்மு பொறுப்பேற்ற பின்னா் தமிழகத்துக்கு முதன்முறையாக வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தெரிகிறது.

    ×