என் மலர்
நீங்கள் தேடியது "முகவர்கள் ஆர்ப்பாட்டம்"
- போனஸ் தொகை உயர்த்த வலியுறுத்தல்
- அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சக்தி கோட்ட செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார். ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
மேலும் இதில் பாலிசிதாரருக்கு போனஸ் தொகை உயர்த்த வேண்டும் பாலிசி கடன் வட்டி விகிதம் குறைக்க வேண்டும் பாலிசி மற்றும் இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி வரி நீக்க வேண்டும் முகவர்களுக்கு பணி கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும் முகவர்களை தொழில் முறையாளராக அங்கீரிக்கப்பட வேண்டும்.
முகவர் நலநிதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துரைத்தனர்.
கோரிக்கையை ஏற்காவிட்டால் பெரிய அளவில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கபடும் என்று முகவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் மாயக்கண்ணன் கோட்ட பொருளாளர் தாண்டவ கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வார விழா புறக்கணிப்பு
- பணிக்கொடையைக உயர்த்த வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர் சங்கத்தின் சார்பில் இன்சூரன்ஸ் வார விழா புறக்கணிப்பு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் கிளை சங்க தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் எம். குலசேகரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் என். விஜயகுமார், ஏ.ஜி. ராதாகிருஷ்ணன், வி.மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எல்ஐசி முகவர் சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் ஜே.கே.என்.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சரவணன், பாலாஜி சம்பத், ஈஸ்வரன் ஊழியர் நலச் சங்கத்தைச் சேர்ந்த இளங்கீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், முகவர்களுக்கான பணிக்கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும், மருத்துவக் குழு காப்பீடு முகவர்களுக்கு வழங்க வேண்டும், குழுக்காப்பீடு வயதுவரம்பு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






