என் மலர்
நீங்கள் தேடியது "கலந்தாய்வு அறிவிப்பு"
- பிளஸ்-1 மாணவர் சேர்க்கையில் 3-ம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும்.
காரைக்கால்:
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-பத்தாம் வகுப்பு ஜூலை, ஆகஸ்ட் 2022 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை, ஆக. 29-ந் தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குனர்(மேல்நிலைக் கல்வி)அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களும், இதுவரை விண்ணப்பித்து எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவர்களும் மற்றும் புதுச்சேரி மாநில குடியுரிமை இல்லாத மாணவர்களும், இந்த 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வு செப்.1-ந் தேதி காலை 10 மணிக்கு தலத்தெரு பகுதியில் உள்ள மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






