என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை பணி"

    • ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

    அரூர்,

    நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புழுதியூர் புதன்சந்தை அருகில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள குமரேசன் கூறுகையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விநாயகர் சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

    இங்கு அரை அடி முதல் 7 அடி வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. சிலைகளானது அளவை பொருத்து ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    களிமண்ணால் ஆன சிலைகளுக்கு வண்ணம் தீட்ட, நீர் நிலைகள் மாசுபடாத வண்ணம், ரசாயண கலவை இன்றி இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டுகிறது என அவர் கூறினார்.

    • விதவிதமான விநாயகர் சிலைகள் தயார்
    • மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி செய்து வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி யொட்டி விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31-ந் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகள் மும்முரமாக செய்து வருகின்றனர். 5 முக விநாயகர், விஷ்ணு விநாயகர் உள்ளிட்ட 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.

    இந்த சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது.

    தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி தண்ணீரில் எளிதாக கரைக்கும் வகையிலும் தண்ணீர் மாசு படாமல் இருக்க பேப்பர் கூழ் கொண்டு சிற்பக் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.

    ×