என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ மோதி"

    • 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார்? என விசாரணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில்வே நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாரா தவிதமாக மூதாட்டி மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிசிச்சை பலனின்றி அந்த மூதாட்டி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவ ரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போ லீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார் ? எந்த ஊர் ? என்ற விசாரித்து வருகின்றனர்.

    • சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது.
    • இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (58). நெசவுத் தொழிலாளி. இவர் காங்கேயம் அருகில் உள்ள பாப்பினியில் பொங்கல் விழாவிற்கு சென்று விட்டு சென்னிமலைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூர்த்திக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தச் சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×