என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக்கெல் பிரேஸ்வெல்"

    • மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பிரேஸ்வெல்க்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.
    • காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது.

    இந்தியா -நியூசிலாந்து அணிகள் ஒருநாள், டி20 போட்டிகளில் மோதி வருகிறது. முதல் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் நாளை நாக்பூரில் தொடங்குகிறது.

    இந்நிலையில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், டி20 தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

    காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது. மாற்று வீரராக கிறிஸ்டியன் கிளார்க், இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்காக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேச போட்டியில் இவர் அறிமுகமானார். இந்த தொடரில் இருமுறை தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்தின் வெற்றிக்கு பேட்டிங்கிலும் அவர் முக்கிய பங்கை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
    • ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

    180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

    இந்த போட்டியில் மைக்கெல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். 13 வது ஓவரை வீசிய பிரேஸ்வெல் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 2-வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் மார்க் அடேர் 4-வது பந்தில் மெக்கார்த்தி 5-வது பந்தில் யங் ஆகியோர் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.


    இதன் மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரராக ஜேக்கப் ஓரம் 2-வது வீரராக டிம் சவுத்தியும் உள்ளனர்.

    ×