என் மலர்
நீங்கள் தேடியது "பெஞ்சுகள்"
- ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
- விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு டெஸ்க், பென்ச்சுகளை வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி ஒன்றியம், கடகத்தூரில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளின் நலன் கருதி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு டெஸ்க், பென்ச்சுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவக்குமார், மற்றும் ஒன்றிய செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருகை அதிகாித்துள்ளது.
- மருத்துவா் கனவை நனவாக்கும் வகையில் எடப்பாடியாா் செயல்பட்டதால் அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகாித்துள்ளது.
தருமபுரி,
தருமபுாி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட சோலைக்கொட்டாய் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி யிலிருந்து மாணவ மாணவிகளுக்கு தேவையான டெஸ்க் மற்றும் பென்ச் இருக்கைகளை எம்எல்ஏ கோவிந்தசாமி வழங்கினாா்.
பின்னா் மாணவ, மாணவிகளிடம் பேசிய எம்எல்ஏ கோவிந்தசாமி தமிழகத்தில் தனியாா் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாணவ மாணவிகளின் வருகை அதிகாித்துள்ளது.
இதற்கு காரணம் எடப்பாடியாா் கொண்டு வந்த 7.5 சதவீதம் ஒதுக்கீடு காரணம் எனவும் அரசு பள்ளியில் படித்து மருத்துவா் கனவை நனவாக்கும் வகையில் எடப்பாடியாாின் திட்டங்களால் அரசு பள்ளியின் மாணவா் சோ்க்கை அதிகாித்துள்ளது.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவா் முன்னாள் முதல்வா் அம்மா எனவும் தொிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் தருமபுாி ஒன்றிய தலைவா் நீலாபுரம் செல்வம் மற்றும் பள்ளி மாணவ மாணவியா்கள் பலா் இருந்தனா்.






