என் மலர்
நீங்கள் தேடியது "கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி"
- கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.
- இந்த பூமி பூஜைக்கு தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் முனிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒன்றியத்தில் சிம்பல்திராடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதேவரபனப்பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.
இந்த பூமி பூஜைக்கு தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் முனிசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தேவி வெங்கடேஷ்ராஜ், பஞ்சாயத்து துணை தலைவர் சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டார்
- சொத்து சீராய்வு குறித்து ஆலோசனை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் நேற்று 15ம்தேதி வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய் வருகை தந்து பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டார்.
மேலும் பிடாரி அம்மன் குளம் சீரமைப்பு, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, சொத்து வரி சீராய்வு செய்ய அளவீடு பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணை தலைவர் குமார், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.






