என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடித்து கொண்டாட்டம்"

    • பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    காவேரிபட்டணம்,

    தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.

    இதனையடுத்து காவேரிப்பட்டணத்தில் தி.மு.க.வினர் 10-க்கும் மேற்பட்ட காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து ,பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முக்கிய பிரமுகர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதே போல் காவேரிப்பட்டணம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி னார்கள்.

    • பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்தது செல்லாது என இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வெளியிட்டனர்.

    இதை அடுத்து முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இதைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் சந்தோஷ் கவுன்சிலர் சபியுல்லா, சசிகுமார், அம்பேத், பிரபா, போண்டா ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை செயலாளராக தேர்வு.
    • எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    மத்தூர்,

    அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை செயலாளராக தேர்ந்தெடுக் கப்பட்டதையடுத்து மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் சக்கரவர்த்தி (வடக்கு), தேவராசன் (தெற்கு), மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரஜான், களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல்,

    ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி அக்ரி சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி,

    முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபாப்பா நடராஜன், ஒன்றிய மீனவரணி செயலாளர் எம்.ஆர் முனுசாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டி.ஜெகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி, இளம் பாசறை செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×