என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் சத்யா உறுதி"

    • ஓசூருக்கு மட்டும், சிறப்பு 2-ஆம் கட்ட திட்டமாக, ஒகேனக்கல்லில் இருந்து 1,050 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
    • வருங்காலத்தில் முழுமையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது, ஓசூர் மாநகருக்கு கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி மாநகர சபை கூட்டம் நடைபெற்றது இதில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ்,மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா,மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் அரசனட்டி ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த கூட்டத்தில், வார்டு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைக்கு பதில் அளித்த மேயர் சத்யா, " ஓசூர் மாநகரத்திற்கு 60 எம். எல். டி.

    குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் புதிய திட்டம் வாயிலாக 6.5 எம்.எல்.டி குடிநீர் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. எனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது கூடுதலாக ரூ 4,000- கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஓசூருக்கு மட்டும், சிறப்பு 2-ஆம் கட்ட திட்டமாக, ஒகேனக்கல்லில் இருந்து 1,050 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. ஆகவே வருங்காலத்தில் முழுமையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது, ஓசூர் மாநகருக்கு கிடைக்கும் என்று உறுதி அளித்தார். மேலும் 5-வது வார்டு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக மேயர் சத்யா மற்றும் ஆணையாளர் பாலசுப்ரமணியன் உறுதி அளித்தனர்.

    • நீங்கள், மாணவர்களுக்கு நல்ல கல்வியை கற்றுத் தாருங்கள்.
    • எதிர்கால மாணவச்செல்வங்களை உருவாக்கி தாருங்கள்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சியின் கல்விக்குழு முதல் கூட்டம் நேற்று நடை பெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். இதில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு, கல்வித் துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட, கல்விக்கென அதிக நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. ஓசூர் மாநகராட்சியில் மற்ற பணிகளுடன் சேர்க்காமல், கல்விக்கென்று தனியாக டெண்டர் வைக்கப்படும்.

    இதன்மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன பணிகள் தேவை என்பதை கண்டறிந்து, தனி டெண்டர் மூலம் அனைத்து பள்ளிகளின் தேவைகளும் நிறைவேற்றி தரப்படும். கொரோனாவிற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போது, 9 பள்ளிகளில், ரூ.6 கோடியே 36 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் நடை பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து.பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உடனடியாக நிறைவேற்றப்படும். மேலும், படிப்படியாக வகுப்பறை வசதிகளும் செய்து தரப்படும்.

    இந்த அரசையும், ஓசூர் மாநகராட்சியையும் நம்பி ஆசிரியர்கள் தைரியமாக செயல்படலாம். அரசு பள்ளி ஆசிரியர்கள், கற்பித்தல் திறமையில்லை தேர்ந்தவர்கள் என்பதை அனைவரும் நன்கு அறிந்துள்ளனர்.

    நீங்கள், மாணவர்களுக்கு நல்ல கல்வியை கற்றுத் தாருங்கள். நல்ல சமுதாயத்தை உருவாக்கித்தா ருங்கள். எதிர்கால மாணவச்செல்வங்களை உருவாக்கி தாருங்கள். மாணவர்களுக்கு பள்ளிப்பாடங்களுடன், நமது நாட்டின் கலாச்சாரம், மொழி கலாச்சாரம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுங்கள்.

    பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், அதனை பராமரிக்கவும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். ஓசூர் மாநகராட்சி பள்ளிகளுக்கென்று தனியாக வர்ணம் பூசப்பட வேண்டும். ஓசூர் மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளும் ஒரே வர்ணத்தில், யூனிபார்மாக காட்சி யளிப்பதை காணும்போது. குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில், சத்யா பேசினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் ஆகியோர் பேசினார். மேலும், சிவராமன், யசஷ்வினி மோகன் உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், ஓசூர் மாநகராட்சிக்குட்ட 36 பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    ×