என் மலர்
நீங்கள் தேடியது "சாலை அமைக்கும் பணிகள்"
- ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டம் சார்பில் சாப்பரத்தி ஊராட்சி செல்லானூர் முதல் பனக்க முட்டலுவரை ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், தொழிலதிபர் சீனிவாசன், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், செந்தாமரை தமிழரசன், காவேரி, ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி சரவணன், பையூர் இளங்கோ, செல்வம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதி சவுந்தர்ராஜன், சக்திவேல், குமரன், சிவராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இருபுறமும் சுமார் 3 அடிகள் அகலப்படுத்த முடிவு
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்து அக்ராவரம் ஊராட்சி ரேணுகாபுரம் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.
2022-2023 திட்டத்தின் கீழ் சுமார் 5.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.6 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் சுமார் 3 அடிகள் அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பாடி விஸ்வநாதன், மூங்கப்பட்டு குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமலுவிஜயன் எம.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.






