என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் மும்முரம்"
- கடைசி நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
- வருங்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயத்துக்கு ஏதுவாக இருக்கும்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சீத்தாபுரம், என். ஊத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், மிளகாய் பட்டி, சிலுக்குவார் பட்டி, விளாம்பட்டி, மைக்கேல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. ஆடி மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட குறைவாக இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். டிராக்டர், மாடுகள் மற்றும் எந்திர கலப்பைகள் மூலமாக உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மாறுபட்ட சீேதாசணத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி வறண்டு கிடக்கும் நிலங்களை டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டுள்ளோம்.
வருங்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயத்துக்கு ஏதுவாக இருக்கும். இதில் மானாவாரி பயிர்கள் பயிரிட முடிவு செய்துள்ளோம். எனவே விவசாயத்திற்கு மழையை மட்டுமே முழுமையாக நம்பி உள்ளோம் என்றனர்.
- வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
- திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் நெல்நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலக்கோட்டை:
வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விளாம்பட்டி, அணைப்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் நெல்நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக நிலத்தை சீரமைத்து மாடுகளை கொண்டு உழவு பணியில் ஈடுபட்டனர். தற்போது நெல்நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல்சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் பணிகள் வேகமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.






