என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை பகுதியில் மழையால் உழவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்
    X

    என். ஊத்துப்பட்டி பகுதியில் உழவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

    நிலக்கோட்டை பகுதியில் மழையால் உழவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

    • கடைசி நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • வருங்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயத்துக்கு ஏதுவாக இருக்கும்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சீத்தாபுரம், என். ஊத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், மிளகாய் பட்டி, சிலுக்குவார் பட்டி, விளாம்பட்டி, மைக்கேல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. ஆடி மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட குறைவாக இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். டிராக்டர், மாடுகள் மற்றும் எந்திர கலப்பைகள் மூலமாக உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மாறுபட்ட சீேதாசணத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி வறண்டு கிடக்கும் நிலங்களை டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டுள்ளோம்.

    வருங்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயத்துக்கு ஏதுவாக இருக்கும். இதில் மானாவாரி பயிர்கள் பயிரிட முடிவு செய்துள்ளோம். எனவே விவசாயத்திற்கு மழையை மட்டுமே முழுமையாக நம்பி உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×