என் மலர்
நீங்கள் தேடியது "தமிழகம் மழை"
- தமிழகத்தில் வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழைதான் தணிக்கிறது.
- தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும் கோடை வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமலேயே இருந்துவருகிறது. தமிழகத்தில் இந்த வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழைதான் தணிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதைத்தொடர்ந்து நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), அதற்கு மறுநாளும் (புதன்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசாக மழை பெய்தது. இதனால் இன்று பகலிலும் சென்னையில் குளிர் நிலவியது.
சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பம் 30 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பம் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 4. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, செங்குன்றம், சோழவரம், கே.வி.குப்பம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், செங்கல்பட்டு, திருச்சுழி, தாமரைப்பாக்கம், காஞ்சீபுரம், கேளம்பாக்கம், திருவள்ளூரில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மற்ற இடங்களில் 1 செ.மீ. அளவுக்கு மிதமான மழை பெய்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்துக்கு பிறகு 7-ந் தேதி காலை 8.30 மணி முதல் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பிரதேசங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், இது 8-ந் தேதி காலை 8.30 மணி வரைக்குமான வானிலை நிலவரம் என்றும் தெரிவித்துள்ளது.






