என் மலர்
நீங்கள் தேடியது "குதிரை வாகனம்"
- ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாஜலபதி சாமி கோவிலில் புரட்டாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- 9-ம் நாள் உற்சவமான இன்று காலை ரதா ரோஹனம் கோரதம் புறப்பாடு நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாஜலபதி சாமி கோவிலில் புரட்டாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று காலை வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது.
இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பெருமாள்- தாயார் தோழிக்கினியான் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
அதனைத் தொடர்ந்து, 9-ம் நாள் உற்சவமான இன்று காலை ரதா ரோஹனம் கோரதம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர், அகோராத்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, மாலை உற்சவர் திருவடி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், நாளை காலை மூலவர் திருமஞ்சனம், மதியம் அன்னபாவாடை உற்சவம், மாலை புஷ்ப யாகம் சாற்று முறை, இரவு சப்தாவரணம் புறப்பாடு நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சாந்தா, அறங்காவலர் குழு தலைவர் மோகன், அறங்கா வலர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன், இளங்கோவன், மகேஸ்வரி மற்றும் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர்.
அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் (ஸ்ரீ பெரியநாயகம்) குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு கால்களையும் ஞான காண்டம், கரும கண்டம் என்னும் காதுகளையும்,
பரஞானம், அபரஞானம் என்னும் கண்களையும் விதிவிலக்கு என்ற முகத்தையும் வாலையும்.,
ஆகமங்கள் என்னும் அணிகளையும், மந்திரங்களாகிய சதங்கை, கிண்கிணி, மாலை சிலம்பு என்பவைகளையும்
பிரணவமாகிய கடிவாளத்தையும், அறுவகைப் புறச்சமயங்களாகிய போர் செய்யும் சேனைகளை வேருடன்
அழித்ததற்கேற்ற வெற்றியையும், பிரமனது முகங்களாகிய இலாயத்தையும் அண்ட கோடிகளாகிய
குதிரையின் மேல் ஏறி சிவபிரான் போர் வீரராகத் தொணடர்களுடைய பாசக் கயிறு இற்று வீழும்படி
எழுந்தருளி வருகிறார் என்ற உண்மையைக் குதிரை வாகனக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.






