என் மலர்
நீங்கள் தேடியது "தலைமை ஹாஜி"
- தமிழக அரசின் தலைமை ஹாஜி கலாவுதீன் முகமது அயூப் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
- எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக அரசின் தலைமை ஹாஜி கலாவுதீன் முகமது அயூப் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வெளியில் வந்த அவரிடம் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை அளிப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
பிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். #Ramadan #Ramzan
சென்னை:
இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.






