என் மலர்
நீங்கள் தேடியது "நிலப்பிரச்சனை"
- ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.
- மனுதாரர் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த சோமசுந்தரம் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் மதுரை தல்லாகுளம் பகுதியில் எல்.கருப்பையா என்பவரிடமிருந்து ஒரு குடியிருப்பு நிலத்தை வாங்கினேன். இதற்காக வாங்கிய தொகையை செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு, நான் கொடுத்த ஆவணங்களை தர மறுக்கின்றனர். அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது போன்ற புகார்களில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிய வருகிறது. இது கட்டப் பஞ்சாயத்து நடத்துவதற்கு சமமாகும் என தெரிவித்த நீதிபதி, முதற்கட்ட விசாரணைக்காக ஒரு நபருக்கு, காவல் அதிகாரி சம்மன் அறிவிப்பு அனுப்ப இயலாது.
முதற்கட்ட விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மற்றும் புகார்தாரரால் வழங்கப்பட்ட துணைப் பொருட்களைப் பார்ப்பது மட்டுமே. ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.
பிரிவு 173(3)-ன் கீழ் எந்தவொரு விசாரணையும், துணை போலீஸ் சூப்பிரண்டின் ஒப்புதலுக்குப் பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் அதன் முடிவு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் மனுதாரர் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்மாடி கோபி. இவர் கிராமத்தலைவராக உள்ளார். கோபி தனது நிலத்தை 10 மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு 33 லட்சம் ரூபாய்க்கு விற்றார். பணத்தை கொடுத்த பின்பும் கோபி நிலத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும், கோபிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது நிலத்தின் விலை அதிகரித்து விட்டது. அதனால் மேலும் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கோபி கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த பெண் கோபியை செருப்பால் அடித்தார். இது கோபிக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. அவர் அந்த பெண்ணை நெஞ்சில் மிதித்து எட்டி உதைத்தார். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை இன்று கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபியுன் அந்த பெண் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். #LandDispute






