என் மலர்
நீங்கள் தேடியது "தாய்லாந்து மழை"
- கம்போடியா-தாய்லாந்து இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
- எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை இரு நாடுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.
புதுடெல்லி:
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இரு நாடுகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். எனவே எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை இரு நாடுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அதில், தாய்லாந்து-கம்போடியா மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே தாய்லாந்தின் சுரின், சிசாகெட் உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை கரணமாக இன்று மீட்பு பணி நடைபெறாது என்று சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்தார். #ThaiCaveRescue






