என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயியை தாக்கிய பெண் கைது"
திட்டக்குடி அருகே முன்விரோத தகராறில் விவசாயியை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40), விவசாயி. இவருக்கும் இவரது தம்பி பாலுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு தனது மனைவி வாசுகியுடன் சேர்ந்து கொண்டு ராஜ்குமாரை தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகியை கைது செய்தனர். பாலுவை தேடி வருகின்றனர்.






