என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா பாலம் விபத்து"

    • பிஜு ஜனதா தள தலைவரான நவீன் பட்நாயக் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார்.
    • காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் கதஜோடி ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில், பாலத்திற்கு தேவையான பெரிய கான்கீரீட்டால் ஆன ஸ்லாப் ஒன்றை கிரேன் உதவியுடன் தூக்கினர். அப்போது அது சரிந்து தொழிலாளர்கள் மற்றும் என்ஜினீயர் ஒருவர்மீது விழுந்தது.

    இதில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி மோகன் சரண் மஜ்ஜி உத்தரவிட்டார்.

    இந்த விபத்து பற்றி தலைமை என்ஜினீயர் தலைமையிலான தொழில்நுட்ப குழுவினர் விசாரணை செய்து, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றபோது ரெயில் மோதியதில் கன்வர் யாத்ரீகர்கள் 4 பேர் உயிரிழந்தனர். #KanwarYatra #OdishaAccident #Kanwariyas
    புவனேஸ்வர்:

    வட இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கன்வர் யாத்திரை நடைபெறும். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, கங்கோத்ரியின் கோ முக் மற்றும் ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து சிவன் கோவிலில் அமாவாசை அல்லது சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்வது தான், இந்த யாத்திரையின் முக்கிய அம்சம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி ஏந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், காவடி ஏந்தி புனித நீர் எடுத்து வந்த யாத்ரீகர்கள், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள வேதவியாசர் கோவிலில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக சென்றுகொண்டிருந்தனர். அப்போது விரைவாக கோயிலை சென்றடைவதற்காக பன்போஷ் ரெயில் நிலையம் அருகே உள்ள பிராமணி ரெயில்வே பாலத்தின் வழியாக சென்றனர்.


    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் ரெயிலில் அடிபட்டு பிராமணி ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 4 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேரின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. ஒருவரின் உடலை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். #KanwarYatra #OdishaAccident #Kanwariyas
    ×