என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து மக்கள் கட்சி நிர்வாகி"

    கடலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கம் வங்கி ஊழியர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 47). அ.தி.மு.க. முன்னாள் நகர இளைஞரணி செயலாளர். இவர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார்.

    கடலூர் மஞ்சக்குப்பம் டெலிபோன் காலனியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி நிர்வாகி பரணிதரன் என்பவர் என்னுடைய மகன் அருண் பிரசாத்துக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் கடலூர் பணிமனையில் சிறப்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் வாங்கினார்.

    ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். தொடர்ந்து நான் பணத்தை கேட்டு வற்புறுத்தியபோது அவர் என்னை மிரட்டினார். அவர் என்னிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்தார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு பரணிதரனை கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27). இந்து மக்கள் கட்சி நிர்வாகி. இவர் கோவையில் தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    தாமோதரனுக்கு திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. பின்னர் மாலையில் பண்ருட்டி-கொக்குப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக தாமோதரன், அவரது பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் தாமோதரன் வீட்டுக்கு வந்தனர். பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த கல்யாண சீர்வரிசை பொருளான 10 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தாமோதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு 9 மணிக்கு வீடு திரும்பினர். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×