என் மலர்
நீங்கள் தேடியது "ரிக்டர் அளவில் பதிவு"
- நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
அந்தமான் கடல் பகுதியில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று மாலை சுமார் 6.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 9.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
தென் அமெரிக்கா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள பெரு - பிரேசில் நாடுகளின் எல்லையில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake
லிமா:
பெரு மற்றும் பிரேசில் நாடுகளின் எல்லையில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கடியில் சுமார் 609 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் சுமார் 7.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பெரு உள்ளிட்ட நாடுகள் அடிக்கடி நிலநடுக்கத்துக்கு இலக்காகி வரும் நிலையில், இன்று ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அவர்கள் தங்களது வீடுகளை விட்டு கூச்சலிட்டபடி ஓடிச்சென்று தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. #Earthquake






