என் மலர்
நீங்கள் தேடியது "ஹவாலா பணம் கடத்தல்"
கேரள மாநிலம் பாலக்காடு ரெயில்வே சந்திப்பில் ரெயில்வே போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகள், பாலக்காடு ரெயில்வே போலீசார் கூட்டாக சோதனை நடத்தினர்.
அப்போது கோவையில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதில் இருந்து இறங்கிய 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கத்தை கத்தையாக ரூ.69 லட்சம் பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இன்றி பணம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த் (வயது 22), தியானேஸ் (19) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறும்போது, வாணியம்பாடியில் இருந்து திருச்சூருக்கு இந்த ஹவாலா பணத்தை கடத்தி வந்ததாக கூறினர். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஹவாலா பணம் கடத்தி செல்லப்படுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்நது கோவை - பாலக்காடு- மலப்புரம் மாவட்ட எல்லைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்றது.பாலக்காடு பட்டாம்பி அருகே உள்ள குலுக்கல்லூரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது ஒற்றப்பாலம்- செர்புளச்சேரி-கொப்பம் வழியாக மலப்புரம் நோக்கி ஒரு மாருதி கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது கார் ஹேண்ட் பிரேக்கினுள் அமைத்த ரகசிய அறைக்குள் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 2 கோடியே 40 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மலப்புரம் மாவட்டம் கல்பகஞ்சேரியை சேர்ந்த முகமது தஸ்லீக் (26), சையத் சிஹாபுதீன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கோவையை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மலப்புரம் கல்பகஞ்சேரியை சேர்ந்த பாசில் என்பவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கோவையில் இருந்து மலப்புரத்துக்கு இந்த பணம் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோவையை சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். #HawalaMoney
கோவையில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேபேஷ்குமார் பெகராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர்களை பிடிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு உத்தரவிட்டார். போலீசார் கோழிக்கோடு பைபாஸ் சலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது ரூ.25 லட்சம் பணம் இருந்தது. பணம் குறித்து கேட்டபோது உரிய பதில் கூறவில்லை. முறையான ஆவணங்களும் இல்லை.
இதனையடுத்து ஹவாலா பணம் கடத்தி வந்ததாக கேரளா மாநிலம் பெருந்தல்மன்னாவை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 36), ரியாஸ் (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






