என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் டார்ச்சர்"

    வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் விவேக்(வயது 25). இவர் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் விவேக் தங்கி இருந்தார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு விவேக் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட விவேக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 1½ மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு விவேக், வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் விவேக் கடைக்கு சென்று புதிய புடவை ஒன்று வாங்கி அதில்அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விவேக் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? காதல் விவகாரமா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்று வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கட்டையன்விளையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது54). ராணித்தோட்டம் பனிமனையில் ராதாகிருஷ்ணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நாகர்கோவிலில் இருந்து சென்னை, கோவை செல்லும் அரசு பஸ்களை இயக்கி வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் பஸ்களை இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் சம்பவத்தன்று வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து இருப்பதை கண்டு பிடித்தனர். அதற்காக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி ராதாகிருஷ்ணனின் மகன் ஸ்ரீராம், ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தந்தையை அதிகாரிகள் நெல்லை வழித்தட பஸ்களை இயக்க கூறியதால் மனம் உடைந்து காணப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் விஷம் குடித்ததாகவும் கூறி இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராதாகிருஷ்ணன் சாவுக்கு அதிகாரிகளின் டார்ச்சர் காரணமா? என்றும் விசாரணை நடக்கிறது.
    ×