என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சரவை ஒப்புதல்"

    • மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி பாஜக ஆட்சி அமைத்ததும் மார்ச் 8-ந்தேதி பெண்கள் வங்கி கணக்கில் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    அத்துடன் முதல் அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

    மகளிர் தினமான இன்று டெல்லி பெண்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்பட்டதற்கான மெசேஜ் வருகிறதா? என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிஷி கிண்டல் செய்துள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2500 வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    மிசோரம் மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #MizoramCabinet #LiquorProhibitionBill
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், மதுவிலக்கை அமல்படுத்த வகை செய்யும் மசோதாவுக்கு (மிசோரம் மதுபான தடைச் சட்ட மசோதா -2019) அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    எனவே, வரும் 20-ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இந்த மதுவிலக்கு மசோதா தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி, கடந்த நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்’ என வாக்குறுதி அளித்திருந்தது.

    மிசோரம் மாநிலத்தில் 1997 முதல் ஜனவரி 2015 வரை பூரண மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் இருந்தது. அதன்பின்னர் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் மதுக்கடைகளை திறக்க காங்கிரசு அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #MizoramCabinet #LiquorProhibitionBill
    ஒடிசா மாநிலத்தில் 49 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மேலவை அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #OdishaLegislativeCouncil
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் சட்ட மேலவை அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த 2015-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சர்  தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பீகார், தெலுங்கானா, மாநிலங்களுக்குச் சென்று சட்ட மேலவை செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தது. பின்னர் சட்ட மேலவை தொடர்பான பரிந்துரை அறிக்கையை முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கடந்த 3-ம் தேதி சமர்ப்பித்தது.



    இந்நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்ட மேலவை அமைப்பது தொடர்பான திட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சட்ட மேலவை தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.

    இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆருக்கா கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 171 (1)-ன்படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் சட்டமேலவையில் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். ஒடிசா சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 147 என்பதால் சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்கள் 49 ஆக இருக்கும்” என்றார். #OdishaLegislativeCouncil

    ×