search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakasi suicide"

    சிவகாசி அருகே அச்சக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள அண்ணா காலனியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மணிகண்டன் (வயது31), அச்சக தொழிலாளி.

    இவருக்கு தங்கபொம்மி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் தங்கபொம்மி குழந்தைகளுடன் மம்சாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பிறகு தனியாக வசித்த மணிகண்டன் மனவேதனை அடைந்தார்.

    வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை செல்வம் கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×