search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siruseri"

    மாதவரம்- சிறுசேரி 2-வது கட்ட மெட்ரோ ரெயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியாருக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை வரை சுரங்கபாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி 52 கி.மீட்டர் வழித்தட பாதை திட்டப்பணிகள் ரூ.69,180 கோடியில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவடையும், வட சென்னை- தென் சென்னை பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது.

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் இயக்கம், மற்றும் பராமரிப்பு பணிகள் தனியாருக்கு விட மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2-வது கட்டமாக உருவாக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பராமரிப்பு, இயக்க பணிகள் அனைத்தும் தனியார் ஊழியர்கள் நிர்வகிக்கிறார்கள். மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் தனியார் மூலம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னை மெட்ரோ 2-வது கட்ட வழித்தட பாதை ரெயில் நிலையங்களும் தனியார் பராமரிப்பு பணிக்கு விடப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் செலவுகள் குறைக்கப்படுகிறது.

    மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்குகிறது. இதற்காக 800 வீடுகள், 162 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. #Metrotrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகள் நிறைவு பெற்றதையொட்டி வருகிற ஜனவரியில் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி வரை 108 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் ரூ. 80 ஆயிரம் கோடி செலவில் தொடங்க திட்டமிடப்பட்டது.

    இந்த வழித்தட்டத்தில் 116 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டு நிதி உதவி மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய நகர்புற வளர்ச்சி துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

    மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரெயில் பணிக்காக 800 வீடு-நிலங்கள் கையகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 162 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் மெட்ரோ நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    எனவே மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப் பாதையில் நடைபெற்று வரும் இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்தும் கேட்டு அறிந்ததார். அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்-1 நீட்டிப்பு பணியான வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நடந்து வரும் கட்டுமான பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல், இயக்குநர் (திட்டம்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Metrotrain
    சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சென்னை கோட்டத்தின் அமலாக்க அதிகாரிகள், மின் பகிர்மான வட்ட அதிகாரிகளுடன் இணைந்து சென்னை தெற்கு-2 மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முறைகேடாக மின் இணைப்பு பயன்படுத்தியதற்காக ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 767 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

    மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை தவிர்க்க விதி முறைகளின் படி, அவர்களே முன்வந்து அதற்குரிய சமரச தொகையான ரூ.76 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×