என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shopping Cart"

    • சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் ஸ்வநிதி திட்டம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து, சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டியினை வழங்கினார்.

    சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதனடிப்படையில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தலா ஒரு வண்டியின் விலை ரூ 1,06,000 மதிப்பீட்டில்,9 உணவு மற்றும் பழ விற்பனை வண்டிகளை ரூ. 9.54,000 மதிப்பீட்டில் மற்றும் ஒரு பூ விற்பனை வண்டி ரூ.60,000 மதிப்பீட்டில் என ரூ. 10,14,000 மதிப்பீட்டில் விற்பனை வண்டிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டிக்கான ஆணையை மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    அருகில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    ×