search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage Treatment Center"

    • பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அஜய் பரதன் ரிப்பன் வெட்டி சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார்
    • சுத்திக்கரிக்கப்படும் தண்ணீரை சி.ஆர்.பி.எப்.வளாகத்தில் உள்ள மரம், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களின் சொந்த உபயோகத்துக்காக தினமும் சுமார் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் அங்கு உள்ள வளாகத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசியது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு பொல்யூசன் கண்ட்ரோல் போர்டு மற்றும் டி.ஆர்.டி.ஒ. அனுமதி பெற்று நிறுவனம் ஆகியவை சுமார் ரூ.2.16 கோடி மதிப்பில் கழிவு நீரை சுத்தப்படுத்தும் பயோ சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்து உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் துர்நாற்றம் துளியும் இன்றி 100 சதவிகிதம் கழிவு நீர் சுத்திகரிப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துடியலூர் சி.ஆர்.பி.எப். போலீஸ் பயிற்சி கல்லூரி மைதானத்தில் அதிநவீன சுத்திகரிப்பு மையம் திறப்பு விழா நடந்தது.

    அப்போது பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அஜய் பரதன் ரிப்பன் வெட்டி சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மதுரை சி.பி.டபுள்யூ. மூத்த பொறியாளர் பவன் குமார் குப்தா, மேக் நிறுவனர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், சி.ஆர்.பி.எப்.கமாண்டர் ராஜேஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், துடியலூர் சுத்திகரிப்பு மையம் வாயிலாக ஒரு நாளைக்கு 400 கிலோ லிட்டர் அளவில் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை சி.ஆர்.பி.எப்.வளாகத்தில் உள்ள மரம், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ×