search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seriously injured after"

    • மொபட்டும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.
    • இதில் தலையில் அடிப்பட்டு நஞ்சப்பன் படுகாயம் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள அனியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (60).

    இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பு.புளியம்பட்டி- சத்தியமங்கலம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அந்த வழியாக எதிரே ஒரு மொபட் வந்தது. அப்போது மொபட்டும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.

    இதில் தலையில் அடிப்பட்டு நஞ்சப்பன் படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×