search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvanayaki Amman"

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அவினாசி கவுண்டன் பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக பக்த ர்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து மாலை விநாயகர் பூஜை, புண்யகம், வாஸ்து சாந்தி, அங்குூரார்பணம், ரக்ஷா பந்தனன் மற்றும் கும்ப அலங்காரம் செய்யப்பட்டு, முதல் காலையாக பூஜை, உபச்சார வழிபாடு மற்றும் திருமுறை பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை நடைபெற்றது.

    தொடர்ந்து அஷ்ட பந்தனம் மருந்து சாற்றுதல் நடை பெற்றது. விழாவையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, 2-ம் கால யாக பூஜை மகா தீபாரதனையும் நடை பெற்றது.

    இதை தொடர்ந்து விநாயகர், செல்வநாயகி அம்மன் கோபுர கலசம், மூலவர் செல்வநாயகி அம்மன், கருப்பராயர், கன்னிமார், மாயவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடை பெற்றது.

    அதை தொடர்ந்து தச தரிசனம், தசதானம், மகா அபிஷேகமும் நடைபெற்று பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் கவுந்தப்பாடி, அவினாசி கவுண்டன் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தார்கள்.

    ×