search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling ganja-liquor"

    • கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்வன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அந்தியூர்-பவானி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    அப்ேபாது அங்கு போதை பொருளான கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அந்தியூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பூவண்ணன் மகன் செல்வன் (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் விஜயமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவ ட்டம் அரக்கோட்டை பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் செல்லத்துரை என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 14 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளை யம் பகுதியில் கஞ்சா விற்ப னை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த சேலம் மாவ ட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கணேசன் (வயது 41) என்ப வரை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதி ப்புள்ள 6.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஜெய சக்தி மேடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த சௌந்தரபாண்டி மகன் கருப்பையா (38) என்பவரை சக்தி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் கைது செய்தார்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 14 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கருப்பையா மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×