search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seasonal diseases"

    • சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.
    • அதிக காய்ச்சலுடன் பாதிப்பும் ஏற்படலாம்.

    பருவகால அலர்ஜியை எளிதில் தடுக்கலாம் மாற்றத்தின்போதும், உணவு பொருட்களின் தன்மை ஆகியவற்றின் காரணமாக சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். இதை தவிர்க்க பருவகால மாற்றத்தின்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும். இதைப் பற்றிய தகவல்களை காண்போம்.

    பருவகால ஒவ்வாமையால் உண்டாகும் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையான வகையில் இருக்கும். இருமல், தும்மல், மூக்கு மற்றும் கண்களில் நீர் வடிவது, மூக்கு மற்றும் காதுகளில் அடைப்பு, கண்கள் மற்றும் சைனஸ் பாதைகளில் அரிப்பு, காதுகளில் சீழ் வடிவது, தலைவலி, மூச்சுத்தினாறல் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். இதுதவிர, அதிக காய்ச்சலுடன் பாதிப்பும் ஏற்படலாம்.

    ஆஸ்துமா ஒவ்வாமையில் இருந்து தப்பிக்கும் வழிகள்:

    வீட்டைச் சுற்றி ஒவ்வாமையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுக்களை அகற்ற வேண்டும். வீட்டிற்குள் தரை விரிப்புகள் மற்றும் மரச்சாமான்களை அகற்றி சுத்தம் செய்வது. குழந்தைகளின் அறையில் அடைந்து வைத்திருக்கும் பொம்மைகளை அகற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் மூச்சுத்தினாறல் போன்ற சுவாச பிரச்சினைகள் சார்ந்த ஒவ்வாமையைத்தடுக்க முடியும்,

    வாரத்திற்கு ஒருமுறை படுக்கை விரிப்புகள். திரைச்சிலைகள் ஆகியவற்றை வெந்நீரில் நனைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

    தலையணைகளை அழுக்கு, தூசு இல்லாத உறைகளால் மூடி வைக்க வேண்டும். நீர்க்கரிவுகள் மற்றும் பாக்டீரியாக்கள், பூச்சிகள் எளிதில் உருவாகும் இடங்களை ஆரம்ப நிலையிலேயே சுத்தப்படுத்த வேண்டும். குளிர் மற்றும் மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பே ஈரப்பதமூட்டிகளையும், கோடை காலத்தில் ஏ.சி இயந்திரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

    உணவில் மாற்றம்:

    உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது. புதிதாக தயாரிக்கப்பட்ட உடளவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    பருவகாலத்திலும் தினமும் காலையில் கிரீன் டீ பருகலாம். இதில், இயற்கையான ஆன்டி ஹிஸ்டமின்கள் உள்ளன. இவை ஒவ்வாமையால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைக்கும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள். கீரைகள், முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

    மசாலா பொருட்கள், காரமான உணவுகள், காபி, பால் பொருட்கள், சாக்லெட் வேர்க்கடலை, சிவப்பு இறைச்சி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    • பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.
    • பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்ச த்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், அரசு மருத்துவ மனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவைகளை முறையாக பயன்படுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் கொசுப்புழு, முதிரி கொசு அழிக்கும் பணிகளுக்கு வருகை தரும் பணியாளர்க ளுக்கு முழு ஒத்துழைப்பு தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு தெரி விக்க வேண்டும். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பற்றியும் அவற்றின் தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும், கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து அனைத்து மேல்நிலை மற்றும் தரைநிலை தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகள் பருவ மழைக்கு முன்னதாக அப்பகுதிகளிலுள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் மூன்று நாட்களுக்குள் முழுமையான தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வும், காய்ச்சல் மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அப்பகுதிகளில் காய்ச்சல் தொடர்பான சிறப்பு முகா ம்கள் நடத்திட வேண்டும்.

    அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவி களுக்கு கொசு ப்புழு, முதிர் கொசு பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரி வளாக ங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சுகாதார மான முறையில் வைத்துக் கொள்ள விழிப்பு ணர்வு அளித்திட வேண்டும்.

    பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்கு னியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்ச த்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், அரசு மருத்துவ மனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுயமாக மருந்து உட்கொள்ளுதல் மருத்துவர்கள் ஆலோசனை யின்றி மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்த வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்சுகந்தி ராஜகுமாரி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×