search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seal deposit"

    • 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீஸ் எச்சரிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில், ஆலங்காயம் போலீசார் நேற்று தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்ப டுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.

    குட்கா விற்பனை

    அப்போது நிம்மியம்பட்டு பகுதியில் பெட்டி கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பதுக்கி வைத்திருந்த 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கடைகளுக்கு சீல்

    வருவாய் துறையினருக்கு போலீசார் பரிந்துரைத்ததின் பேரில், வாணியம்பாடி தாசில்தார் சம்பத், ஆலங்காயம் வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் சர்குணகுமார் உள்ளிட்டோர் அடங்கிய வருவாய் துறையினர், பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தாசில்தார் அதிரடி
    • எஸ்.பி.க்கு வந்த தகவலையடுத்து அதிகாரிகள்சோதனை நடத்தினர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா, பான்பராக், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில், அவரது உத்தரவின் அடிப்படையில் வாணியம்பாடி பகுதியில் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி-நேதாஜி நகர், மில்லத் நகர் பகுதியில் உள்ள 3 கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் போலீசார் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

    ×