search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல் வைப்பு
    X

    குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல் வைப்பு

    • தாசில்தார் அதிரடி
    • எஸ்.பி.க்கு வந்த தகவலையடுத்து அதிகாரிகள்சோதனை நடத்தினர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா, பான்பராக், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில், அவரது உத்தரவின் அடிப்படையில் வாணியம்பாடி பகுதியில் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி-நேதாஜி நகர், மில்லத் நகர் பகுதியில் உள்ள 3 கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் போலீசார் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

    Next Story
    ×