search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா விற்ற கடைக்கு சீல் வைப்பு
    X

    குட்கா விற்ற கடைக்கு சீல் வைப்பு

    • 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீஸ் எச்சரிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில், ஆலங்காயம் போலீசார் நேற்று தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்ப டுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.

    குட்கா விற்பனை

    அப்போது நிம்மியம்பட்டு பகுதியில் பெட்டி கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பதுக்கி வைத்திருந்த 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கடைகளுக்கு சீல்

    வருவாய் துறையினருக்கு போலீசார் பரிந்துரைத்ததின் பேரில், வாணியம்பாடி தாசில்தார் சம்பத், ஆலங்காயம் வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் சர்குணகுமார் உள்ளிட்டோர் அடங்கிய வருவாய் துறையினர், பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×