search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scheme offering Rs.1000"

    • மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு வாடிப்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 693 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணமாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சட்ட மன்றத்தில் நிறைவேற் றப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகையை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகா னந்தன், கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×