search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sankarankovi"

    • சங்கரன்கோவில் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.68 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டுவத ற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தினசரி மார்க்கெட் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.68 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டுவத ற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் ஹரிகரன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர் புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தினசரி மார்க்கெட் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்து பேசினார்.

    இதில் காஞ்சிபுரம் பட்டு நூல் கழக சேர்மன் மணிவண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யதுஅலி, இளைஞர் அணி சரவணன், மார்க்கெட் சங்க நிர்வாகி கணேசன், யோசேப்பு, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், கே.எஸ்.எஸ். மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் குருப்பிரியா, அலமேலு, புஷ்பம், செல்வராஜ், ராமுராமர், வேல்ராஜ், ராஜாஆறுமுகம், சாகுல் ஹமீது, வக்கீல்கள் சதீஷ், ராம்குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், மூத்த நிர்வாகி சந்திரன், நகராட்சி கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து, மற்றும் ஜிந்தா மைதீன், சிறுபான்மையர் அணி அப்துல் காதர், அரசு ஒப்பந்ததாரர் நிஜார் மற்றும் வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, வைரவேல், சரவணன், தங்கவேலு, தாஸ், விக்னேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    ×