search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankar muthusamy"

    • இறுதி போட்டியில் தைபே வீரரிடம், தமிழக வீரர் தோல்வி.
    • இந்த தொடரில் இதுவரை வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது வீரர் சங்கர் முத்துசாமி.

    சாண்டேன்டர்:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, தைபே வீரர் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியின் 21-14, 22-20 என்ற கணக்கில் சங்கர் தோல்வியடைந்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் அவரது கனவு தகர்ந்தது. இந்த தொடரில் வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 


    இதற்கு முன்னர் இந்தியா சார்பில் அபர்ணா போபட் (1996), சாய்னா நேவால் (2006) மற்றும் சிரில் வர்மா (2015) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். எனினும் சாய்னா மட்டுமே கடந்த 2008 ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதி போட்டியில் தாய்லாந்து வீரரை தோற்கடித்தார்.
    • 2016 ஆண்டுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்.

    சாண்டேன்டர்:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பனிட்சாபோன் தீரரட்சகுலுடன் மோதினார்.

    இதில் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சங்கர் முத்துசாமி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம், 2016க்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை சங்கர் முத்துசாமி பெற்றார்.

    முன்னதாக கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மின்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். #sankarmuthusamy #badminton #champion
    சென்னை:

    15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேங்கிங் பேட்மின்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-11 என்ற நேர்செட்டுகளில் முதல்நிலை வீரரான பிரணவ் ராவ் காந்தமை (தெலுங்கானா) தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    தேசிய ரேங்கிங் போட்டியில் சங்கர் 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார். சங்கர் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்ச்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார். #sankarmuthusamy #badminton #champion
    ×