என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sale of tea powder"
- ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.
- தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஏலத்தில் 89.72 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. இது குறித்து தேயிலை வா்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-
நீலகிரி மாவட்டம், குன்னூரில் 25-வது தேயிலை ஏலம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இந்த ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.
எகிப்து, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி யாளா்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததாலும், உள்நாட்டு தேவை அதிகரிப்பாலும் 21 லட்சத்து 39 ஆயிரத்து 71 கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இது மொத்த விற்பனையில் 89.72 சதவீதமாகும். சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ. 97.94 வரை விலை கிடைத்துள்ளது.
தற்போது நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட ஒரு லட்சம் கிலோ வரை அதிகம் விற்பனைக்கு வந்திரு ந்தாலும், தரத்துக்கு முக்கியத்துவம் தராததால் தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டதாகவும், தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஏலத்தில் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தேயிலை வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
