search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale of tea powder"

    • ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.
    • தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஏலத்தில் 89.72 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. இது குறித்து தேயிலை வா்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் 25-வது தேயிலை ஏலம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இந்த ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.

    எகிப்து, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி யாளா்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததாலும், உள்நாட்டு தேவை அதிகரிப்பாலும் 21 லட்சத்து 39 ஆயிரத்து 71 கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இது மொத்த விற்பனையில் 89.72 சதவீதமாகும். சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ. 97.94 வரை விலை கிடைத்துள்ளது.

    தற்போது நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட ஒரு லட்சம் கிலோ வரை அதிகம் விற்பனைக்கு வந்திரு ந்தாலும், தரத்துக்கு முக்கியத்துவம் தராததால் தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டதாகவும், தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஏலத்தில் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தேயிலை வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

    ×