search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Safety Rehearsal"

    • விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • மழை காலங்களில் நீர் நிலைகளில் பாதுகாப்பு இல்லாமல் குளிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக பாது காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் கனகா தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சதீஷ்குமார், தவசிராஜ், மாரிமுத்து, சுப்பிரமணியன், சுரேஷ்குமார்,துரை ஆகியோர் பங்கேற்று, மாணவ- மாணவிகளுககு பருவ மழை முன்னெ ச்சரிக்கை நடவடிககையாக தண்ணீரினால் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து தப்பிககும் வழிமுறைகள் குறித்து செயல் முறைகள் மூலம் எடுத்துரைத்தனர். தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையும் அதற்கான உரிய ஆவணங்களுடன் செய்து காண்பித்தனர்.

    மழை காலங்களில் குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் பாதுகாப்பு இல்லாமல் குளிக்க மற்றும் நீர் எடுக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும் தக வல் அறியும் சட்டம் குறி த்தும் எடுத்து ரைத்தனர்.

    இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொ ண்டனர். முடிவில் உதவி ஆசிரி யர் சண்முக ராஜ் நன்றி கூறினார்.

    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு படகுகள் மூலம் கடலுக்குள் சென்றனர்.
    • இன்று சாகர் கவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு போலீசாரின் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது.

    கூட்டு பாதுகாப்பு ஒத்திகை

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் டி.எஸ்.பி. பிரதாபன், இன்ஸ்பெக்டர் சைரஸ், தலைமையில் பாதுகாப்பு குழும போலீசார் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு படகுகள் மூலம் கடலுக்குள் சென்றனர்.

    இந்த ஒத்திகையில் கடலோர காவல் படை, இந்திய கடற் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, உளவுப்பிரிவு , மத்திய தொழில் பாதுகாப்பு படை உட்பட போலீசார் கலந்து கொண்டு கூட்டு பாதுகாப்பு ஒத்திகை, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு கொள்கின்றனர்.

    கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடலோர மாவட்டங்களில் ஆப்ரேஷன் அம்லா, சுரக்சா, ரக்சாக், சாகர் கவாஜ், சிவிஜில் உள்ளிட்ட பெயர்களில் போலீசாரின் கூட்டு பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இன்று சாகர் கவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது. இந்த ஒத்திகை நாளை ( புதன் கிழமை) மாலை வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×