search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.900"

    • ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்தாகி இருந்தது.
    • இன்று மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.இதேபோல் மற்ற மீன்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனிபாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.

    இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்கப்ப டுவதால் இங்கு எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக மீன்கள் வரத்து அதிகமாக வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீண்டும் விலை சற்று குறைந்துள்ளது.

    ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்தாகி இருந்தது. இன்று 8 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது.

    கடந்த வாரம் 900-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் இந்த வாரமும் அதே விலைக்கு விற்பனையானது. இன்று மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.இதேபோல் மற்ற மீன்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

    இன்று மார்க்கெட்டில் மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    கிளி-450, வவ்வால்-450, விளா-450, மஞ்சள் சாரை-500, சீலா-500, அயிலை-250, சங்கரா-350, மத்தி-200, கொடுவா-500, பெரியஇறால்-750, சின்ன இறால்-550, நண்டு-500, உளி-450, பாறை-450,

    இதேப்போல் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து இன்று அதிகமாக இருந்தது. அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    ×