search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.1.50 Crores"

    • மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பை பெற்று வருகிறது
    • இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது

    கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்'  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

    நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.

    இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதுவரை ரூ.150 கோடி வரை வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கமல் நடித்த 'குணா' படம் இங்குதான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்த நாயக்க ன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 120-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 120-ம் அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். ,

    இதில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக் குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

    சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    சந்தையில் மாடுகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபா ரிகள் தெரிவித்தனர். திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி உள்பட பல வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.

    ×