search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rockslides on"

    • கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை அமைந்து உள்ளது. இந்த மலைப் பாதையில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல க்கூடிய தெசிய நெடுஞ் சாலை உள்ளது.

    இந்த மலைப்பாதை வழியாக தினமும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கிறது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம், திம்பம் வனப்பகுதி மலைப்பாதை 23 கொண்டை ஊசி வளைவு கள் கொண்டது. இந்த வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

    திம்பம் வனப்பகுதி ரோட்டில் அடிக்கடி வாகன ங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால் மாற்று பாதையாக அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக பல கனரக வாகனங்கள் மைசூருக்கு சென்று வருகிறது.

    மேலும் நேரம் விரையம் ஏற்படு வதும் தவிர்க்கபபடுவதால் பர்கூர் மலை பாதையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.

    இதையடுத்து பர்கூர் மலை்பாதை சாலைகள் அந்தியூரில் இருந்து தமிழக எல்லைப் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்தியூர் நகரமே தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் மைசூர் செல்லும் பர்கூர் மலை ப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது. இதை யடுத்து ஒரு சில இடங்களில் சரி செய்யப்பட்டது. பெருபாலான இடங்களில் ரோட்டோரங்களில் பாறை கள் அப்படியே கிடக்கிறது.

    இதே போல் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் இருந்து செட்டிநொடு, தாமரைக்கரை, பர்கூர் தட்டகரை, கர்கேகண்டி வரை சாலைகளில் சுமார் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டும், சாலையில் மரங்கள் முறிந்தும் கிடக்கிறது.

    இதனால் இந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாக னங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில 4 சக்கர வாகனங்கள் மட்டுமே தட்டுதடுமாறி சென்று வருகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    எனவே பர்கூர் மலை ப்பாதையில் ரோட்டோரம் கிடக்கும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளை வனத்துறை யினர் மற்றும் ேதசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×