search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery in the temple"

    • வலம்புரி ஆண்டவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடு போயிள்ளது
    • தொடர் திருட்டினால் பொதுமக்கள் அச்சம்

    அரியலூர்

    செந்துறை அருகே உள்ள மிருகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வலம்புரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். பின்னர் அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இதே போன்று கடந்த சில நாட்களாக பரணம், பிலா குறிச்சி, வீரா கண் ஆகிய கிராமங்களில் தொடர்ந்து பலரது விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் மற்றும் வயர்களை வெட்டி திருடி சென்று விட்டனர். இந்தத் தொடர் திருட்டு காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஆகவே மேற்கண்ட கிராமங்களில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பக்தர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உண்டியலை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மலையில் மயிலாடும்பாறை முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பூஜைகள் நடக்கிறது. விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி கிருத்திகை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தினர்.

    நேற்று இரவு பூஜை முடிந்து பூட்டி சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.பூட்டை உடைத்து அங்கிருந்த சாமி அலங்கார பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்று விட்டனர்.

    ஆடி கிருத்திகை முடிந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக இன்று காலை கோவில் நிர்வாகிகள் சென்றனர். அப்போது கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மயிலாடும்பாறை முருகன் கோவிலில் பணம் பொருட்கள் கொள்ளை போனது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×