search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RK Nagar Bypoll"

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    சென்னை:

    ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை?

    ஆர்.கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை ஏன் சேர்க்கவில்லை? அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்?

    வாக்காளர்களுக்கு பணம் அளித்தது யார்? தேர்தல் ஆணையம் அளித்த புகாரிலேயே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினர்.

    எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் வருமானவரித்துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #TTVDhinakaran #RKNagarBypoll
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோர் தோல்வி அடைந்தனர். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. #TTVDhinakaran #RKNagar #RKNagarBypoll #CaseAgainstTTV

    ×