search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescued chennai"

    • பாளை பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர்
    • சென்னை சென்ற போலீசார் 24 மணி நேரத்திற்குள் மாணவர்களை மீட்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை, பாளை பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றனர்.

    மாணவர்கள் மாயம்

    பின்னர் அவர்கள் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் இரவில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாளை போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் பிரதீப் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வாசிவம், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் தலைமை காவலர் நவராஜ் ஆகியோர் காணாமல் போன மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    24 மணிநேரத்தில்

    அப்போது மாணவர்கள் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை சென்ற போலீசார் 24 மணி நேரத்திற்குள் மாணவர்களை மீட்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் இந்த விரைவான செயலுக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

    ×